இடமாறுதலை எதிர்த்து டாக்டர்கள் வழக்கு

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல டாக்டர்களை பல்வேறு ஊர்களுக்கு பணியிட மாறுதல் செய்தும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைகளுக்கு தடை விதித்தார். ஆனால் மாறுதலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: