தண்டையார்பேட்டை: சென்னமல்லீஸ்வரர் சென்னகேசவ பெருமாள் கோயில் இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் வாடகை செலுத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை கூறியிருந்தது. அதன்படி இதுவரை 1.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூக்கடை தேவராஜ முதலித்தெருவில் சென்னமல்லீஸ்வரர் சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக கொத்தவால்சாவடி வரதாமுத்தியப்பன் தெருவில் 144 கடைகள் உள்ளன. இங்கு கடை நடத்துபவர்கள் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளனர். எனவே வாடகை வசூல் செய்யாமல் ₹3.24 கோடி பாக்கி இருப்பதாகவும் இந்து சமய அறநிலைத்துறை வாடகை பாக்கியை உடனே வசூலிக்கும் படி அறிவுறுத்தியது.
இதுகுறித்து கோயில் மேலாளர் ஜெயராமன் வாடகைதாரர் 144 பேருக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தவில்லையெனில் கடையை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.