தண்டையார்பேட்டை: காசிமேடு கடற்கரையில் தொப்புள் கொடியுடன் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிமேடு துறைமுகம் பழைய வார்ப்பு கடற்கரையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை சடலம் கிடப்பதாக, மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடப்பது தெரிந்தது.