சென்னை: நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி.கீதா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் பொருளாளர் நடிகர் கார்த்தி ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகர் சங்கம் தரப்பில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரியாக கீதாவை நியமித்தது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.