விருதுநகர்: முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர், கட்டையாபுரம், ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த ஜூன் 6ல் திருமணம் நடந்தது. அப்போது 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணம் முடிந்த நாளில் இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை. அப்போது, மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, ‘உனக்கும், சரவணனுக்கும் முதலிரவு நடக்காது’ என பானுவிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பானு, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுதொடர்பாக மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர்.