ரயில் நிலைய நுைழவாயில் மூடல்; பயணிகள் திணறல்

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள மேம்பாலம் வழியாக பூங்கா நகர் ரயில் நிலையத்திற்கு பயணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் முன்னறிவிப்பு மற்றும் முதியவர்களின் நிலையை கருதாமல் மேம்பாலம் மேல் உள்ள பூங்காநகர் ரயில் நிலைய நுழைவு பாதை மூடப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளை போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் செய்கின்றனர்.அடுத்த படம்: சென்ட்ரலில் இருந்து பூங்கா நகர் ரயில் நிலையம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல புதிதாக மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை நேற்று திறக்கப்பட்டது. இதனால், சாலையை கடக்க வந்த பொதுமக்களை தடுத்து சுரங்கப்பாதையில் செல்லுமாறு அனுப்புகிறார் போலீஸ்காரர். கடைசி படம்: புதிய சுரங்கப்பாதையில் கஷ்டப்பட்டு குழந்தையுடன் படிக்கெட்டு ஏறி வரும் பெண்.

Related Stories: