திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: இந்து கோயில்கள் குறித்து திருமாவளவன் தனது கட்சி கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகள் தெரிவித்தார்.  அதைதொடர்ந்து இந்து அமைப்புகள் சார்பில் திருமாவளவனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அப்போது நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவன் குறித்து தனிப்பட்ட வகையில் சில வார்த்தைகளை பதிவு செய்திருந்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதையடுத்து நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து அவரது வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிர் அணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் நடிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் இருந்து தனக்கு ெகாலை மிரட்டல் வருவதாகவும், வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் சுற்றி வருவதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டிவிட்டர் பக்கத்தில் இன்று மெரினா கடற்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேருக்கு நேர் சந்திக்க தயார் என்று கூறி இருந்ததால், ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகை பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: