சென்னை: தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் வாரியதலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:மத்தியில் ஆளும் பாஜ அரசு, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்காமல் சமூக அநீதி செய்துள்ளது. 2017-2018ம் ஆண்டு மொத்த மருத்துவ இடங்கள் 9,966. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2,689 இடங்கள் 27 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கியிருக்கவேண்டும். வெறும் 260 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.