சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எழும்பூர் மகப்பேறு மருத்துமவனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அதிக அளவில் மகப்பேறு சிகிச்சை, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சைப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துமவனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.