திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எழும்பூர் மகப்பேறு மருத்துமவனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அதிக அளவில் மகப்பேறு சிகிச்சை, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சைப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துமவனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக சிகிச்சை தொடர்பாக பணியில் இருந்த டாக்டர்கள் அவருக்கு விளக்கம் அளித்தனர். அதேப்போல் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகளின் தாய்மார்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரித்தார்.

Related Stories: