பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதி வீட்டில் குட்கா தயாரிக்கப்பட்டு வடசென்னையில் வினியோகிக்கப்படுவதாக கொடுங்கையூர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி கொடுங்கையூர் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியபோது ஆர்.ஆர்.நகர் பகுதியில் டில்லிபாபு என்பவரது வீட்டில் 10 பண்டல்கள் குட்கா தயாரிக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.