போக்குவரத்து நெருக்கடியால் திணறும் புளியங்குடி - சிந்தாமணி பகுதிகள்: ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

புளியங்குடி: சிந்தாமணி டோல்கேட் பகுதியில் முறையான ரவுண்டாணா இல்லாததால் சாலையை கடந்து செல்ல முடியாமல் பள்ளி மாணவர்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சிந்தாமணி டோல்கேட் பகுதியானது நான்கு வழி பாதை கொண்டது. கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, தென்காசி - சங்கரன்கோவில் பாதை, சிந்தாமணி நகருக்கு செல்லும் பாதை, சிந்தாமணி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதை என நான்கு வழிகளை கொண்டது. இந்த நான்கு வழிகளிலும் எல்லா நேரத்திலும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பகுதியில் 30000 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 6 பள்ளிகளும், ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது.

இந்த 6 பள்ளி வாகனங்கள் மட்டும் அல்லாது புளியங்குடியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சிந்தாமணி நகருக்குள் மாணவர்களை காலையிலும், மாலையிலும் ஏற்றி, இறக்குவதற்கு வருகிறது. அரசு பேருந்தில் வரும் மாணவர்களும் நடந்து வரும் மாணவர்களும், சைக்கிளில் வரும் மாணவர்களும் சாலையை கடக்க முடியாமல் பல நிமிடங்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரவுண்டாணா அமைத்து போக்குவரத்து சிக்னல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: