புளியங்குடி: சிந்தாமணி டோல்கேட் பகுதியில் முறையான ரவுண்டாணா இல்லாததால் சாலையை கடந்து செல்ல முடியாமல் பள்ளி மாணவர்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சிந்தாமணி டோல்கேட் பகுதியானது நான்கு வழி பாதை கொண்டது. கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, தென்காசி - சங்கரன்கோவில் பாதை, சிந்தாமணி நகருக்கு செல்லும் பாதை, சிந்தாமணி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பாதை என நான்கு வழிகளை கொண்டது. இந்த நான்கு வழிகளிலும் எல்லா நேரத்திலும் வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். சிந்தாமணி பகுதியில் 30000 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 6 பள்ளிகளும், ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது.