நெல்லை: நெல்லை ஊசி கோபுரம் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். அப்போது தேவாலயம் முன் பலர் குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சைல்ட் ஹெல்த் லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலத்தலைவர் சந்திரகுமார் உத்தரவுப்படி அந்தோணி உள்ளிட்ட களப் பணியாளர்கள் அந்த பகுதிக்கு வந்தனர்.