சென்னை, நவ.24:கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடல் ஏன் என்பது தொடர்பாக கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் வருவாய் இழப்பை காரணம் காட்டி 42 விற்பனை நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மூடப்பட்டது.இதற்கான காரணம் குறித்து அதன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை: போட்டி மிகுந்து விட்ட, மாறி வரும் இன்றைய ஜவுளி வியாபாரச் சந்தையில் தனித்தன்மையுடன் செயலாற்றி, எதிர்காலத்தில் நிலைத்து நிற்பதற்காக கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. பல விற்பனை நிலையங்கள் வாடகை நிர்ணயம் சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகளில் உள்ளது.