பக்ரைன் முன்னணி மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பக்ரைன் நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனையில் பணியில் சேர டாக்டர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: பக்ரைன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி மருத்துவமனைக்கு ஐந்து வருட பணி அனுபவமுள்ள மருத்துவர்கள், டெக்னீசியன்கள் மற்றும் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மாத சம்பளம் மருத்துவர்களுக்கு ரூ.3,80,000, டெக்னீசியன்களுக்கு ரூ.60,000, செவிலியர்களுக்கு ரூ.57,000 மற்றும் அந்த நாட்டு சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலை அளிப்பவர்களால் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories: