2021ம் ஆண்டு தேர்தலில் 100க்கு 100% தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார்கள் : நடிகர் ரஜினிகாந்த் உறுதி

சென்னை : 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100% தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்தப்போகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல் ஈடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு நடிகர் ரஜினி இவ்வாறு பதில் அளித்துள்ளார். கோவாவில் இருந்து சென்னை திரும்பிய பின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம்; அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்என்றார். பின்னர் கமலுடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த்,  கட்சி தொடங்கிய பின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு இது என்றும் கூறினார்.

Related Stories: