சென்னை: இந்திரா காந்தியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், டாக்டர் செல்லக்குமார் எம்பி, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, முன்னாள் எம்பி ராணி, சிரஞ்சீவி, அஸ்லாம் பாஷா, தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஹசன் ஆரூண், இரா.மனோகர், நாஞ்சில் பிரசாத், எஸ்.கே.நவாஸ், வில்லிவாக்கம் சுரேஷ், சுமதி அன்பரசு, மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்ட எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் பாலவிகார் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை கே.எஸ்.அழகிரி வழங்கினார்.