சென்னை: நடந்தாய் வாழி காவிரி உள்ளிட்ட பல்வேறு திட்டத்துக்கு 12 ஆயிரம் கோடி நிதி கேட்டு தமிழக அரசு அறிக்கை தாக்கல் தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் வறட்சியை போக்க மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜல்சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல மாநில அரசுகள் நிதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் நிதியை பெறும் பணிகளை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் 22 வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஜல்சக்தி அபியான் திட்ட குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது, ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி நீரை சேமிப்பது, ஏரிகளின் கரையோரத்தில் பனை மரங்கள் நடுவது உள்ளிட்ட பணிளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்தது.