சென்னை: சென்னை, தரமணியில் சாலை போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கும்மிபூண்டி, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் கனரக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், பல்வேறு விதமான கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சியளிக்கப்படுகிறது. 2018-19ம் ஆண்டு வரை மொத்தம் 60,300க்கும் மேற்பட்டோருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கான இலவச பயிற்சி மையங்கள் சென்னை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ளன. இங்கு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இலவச பயிற்சியை எடுத்துக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான இலவச பயிற்சி ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு பெண்கள் அதிக அளவில் பயிற்சிக்கு வருகிறார்கள். இதற்கு 6 ஏக்கர் அளவில் பரப்பளவு கொண்ட இடத்தில் பயிற்சி அளிக்கப்படுவதே காரணம்.