சென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு பழமையான நடைமுறையை பொதுப்பணித்துறை பின்பற்ற முடிவு செய்துள்ளது.சென்னை எழிலகம் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கல்சா மகால் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. அப்போது, அருகில் இருந்த ஹூமாயூன் மகால் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ₹19 கோடி செலவில் கல்சா மகால் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2014ல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தை புனரமைப்பு பணிக்கு பாரம்பரிய கட்டிட கோட்டம் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் குழு ஹூமாயூன் மகால் சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து அரசிடம் அளித்தது. அப்போது 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு டிசம்பரில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு ₹36 கோடி நிதி ஒதுக்–்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 33 கோடி புனரமைப்பு பணிக்கும் 3 கோடி மின்சாதன பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஹூமாயூன் மகாலில் உள்ள செடி, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டிடங்களில் பலவீனமாக பகுதிகளை ஆய்வு செய்து, அந்த இடத்தை மட்டும் நீக்கி விட்டனர். ேமலும் கட்டிடத்தில் பூச்சுகள் அனைத்தையும் பெயர்த்து எடுத்தனர்.