சென்னை: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்க பார்கவுன்சில் உறுப்பினர்கள் 3 பேர் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெகன் தலைமையிலான குழு அந்த பொறுப்பிலிருந்து கடந்த 14ம் தேதி விலகியது. பின்னர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பி.டி.எபனேசர், கிளமன்ஸ், எம்.முரளி ஆகிய மூத்த வக்கீல்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.