ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வக்கீல் சங்கத்தை நிர்வகிக்க குழு : தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவு

சென்னை: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்க பார்கவுன்சில் உறுப்பினர்கள் 3 பேர் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெகன் தலைமையிலான குழு அந்த பொறுப்பிலிருந்து கடந்த 14ம் தேதி  விலகியது. பின்னர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பி.டி.எபனேசர், கிளமன்ஸ், எம்.முரளி ஆகிய மூத்த வக்கீல்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பார்கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பார்கவுன்சில் நியமித்துள்ள 3 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வக்கீல்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சங்க வளாகம் வக்கீல்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஏதாவது விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் பார்கவுன்சிலுக்கு வக்கீல்கள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: