திருக்கனூர்: திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், அங்குள்ள கோயிலுக்குச் சொந்தமான தாமரைக் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்தார். அப்போது அவரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள பழைய நீர்த்தொட்டியை அகற்றுமாறு கோரிக்கை வைத்தனர். உடனே கலெக்டர் அருண் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாரிடம் பழைய தண்ணீர் தொட்டியை உடனடியாக அகற்றும்படி கூறினார்