காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மாவட்ட உயர்தொழில்நுட்ப காய்கறி சாகுபடி கருத்தரங்கம் ேநற்று நடந்தது. இதில் பங்கேற்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:முன்பு எல்லாம் மாடுகளை வைத்து ஏர் பூட்டி விவசாயம் செய்யப்பட்டது. அதிக உடல் உழைப்பு இருந்ததால் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை. குடும்பத்துடன் விவசாய பணிகள் பார்த்ததால் லாபம் கிடைத்தது. தற்போது ஒரு ஏக்கர் நடவு செய்ய ரூ.18 ஆயிரம் வரை செலவாகிறது. செலவு செய்தும் விளையுமா என்ற நம்பிக்கை இல்லை. மழை பெய்தால்தானே விளையும். சில நேரங்களில் செலவு செய்து கடனாளியாகி போகிறோம். விவசாய பணிக்கு இளைஞர்கள் வருவது கிடையாது. படிக்க வைத்தாலும் அரையும் குறையுமாக படித்து ஆப், குவார்ட்டர் அடிக்கின்றனர். ஆண்களில் 100 பேருக்கு 20 பேர் தான் நன்றாக படிக்கின்றனர். பெண்கள் தான் நன்றாக படிக்கின்றனர். செல்போன் அதிகளவில் கெடுக்கிறது. வெளிநாடுகளில் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. புதிய யுக்திகளை கடைபிடித்து விவசாயத்தில் முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.