×

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க மனைவி நளினிக்கு அனுமதி வழங்க சிறைத்துறைக்கு உத்தரவு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறு சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி தரக்கோரி உறவினர் தேன்மொழி என்பவர் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார். முருகனை சாதாரண சிறைக்கு மாற்றக் கோரியும் உறவினர் தேன்மொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். 


Tags : Nalini ,Murder ,Rajiv Gandhi , Rajiv Gandhi Murder, High Court, Jail, Conviction
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...