தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை : தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு  உடனடியாக மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றும் பழனிசாமி அரசு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உரிய ஆதாரங்களையும் சரியான முறையில் வாதங்களையும் எடுத்து வைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: