சென்னை: வேளச்சேரி மெயின் ரோடு செக் போஸ்ட் அருகில் ராஜ்பவன் காலனி உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்துக்கு கீழ் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்போது இந்த மழைநீர் வடிகால்வாய் மூலம் மழை தண்ணீர் வெளியேற்றப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால்வாய் வழியாக செல்லும் மழைநீர் அங்கிருந்து நேராக வேளச்சேரி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் இந்த பாலத்துக்கு கீழ் தேங்கியது. அன்று முதல் அப்படியே மணல் மேடாக காணப்படுவதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாக்கடை கழிவுகளாக மாறிவிட்டது.
தற்போது மழைநீர் செல்லும் வடிகால்வாய் முழுவதும் சாக்கடை கழிவுகள் திட்டுகளாக தேங்கி கிடக்கிறது.