புதுடெல்லி: கடந்த 2018-19ம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து பாஜ ரூ356 கோடி நன்கொடை பெற்றுள்ளது.இந்த ஆண்டில் அதற்கு ரூ700 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி அரசியல் கட்சிகள் ஒவ்வொரு நிதியாண்டில் பெற்ற நன்கொடை எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட வேண்டும். தற்போதைய விதிமுறைப்படி ரூ20,000க்கும் குறைவாக தனி நபரிடம் இருந்தோ அல்லது அமைப்பிடம் இருந்தோ கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய விவரத்தை ெவளியிட தேவையில்லை. இந்நிலையில், கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜ பெற்ற நன்கொடை விவரம் கடந்த மாதம் 31ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.