சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் ஆப்ரகாம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளும் மேலாக சமையலராக பணியாற்றி வருவோருக்கு பதவி உயர்வு வழங்கி சத்துணவு அமைப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.