போலீஸ் உடற்தகுதி தேர்வு 18ம் தேதி தொடக்கம்

சென்னை: அயோத்தி தீர்ப்பையொட்டி ஒத்திவைக்கப்பட்ட போலீஸ் உடற்தகுதி தேர்வுகள் மீணடும் வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது. அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த 9ம் தேதி உச்ச நீதிமன்ற அறிவித்தது. தீர்ப்பின் போது அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் போலீஸ் உடற்தகுதி தேர்வு டிஜிபி திரிபாரி உத்தரவுப்படி கடந்த 8ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 18ம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் திட்டமிட்டப்படி போலீஸ் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உடல் தகுதி தேர்வு நடத்தும் காவல் துறை அதிகாரிகளுக்கு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் அவசர சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

Related Stories: