சென்னை: பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நடிகர் ரஜினி சென்ற விமானம் ஏறக்குறைய 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.பெங்களூருவில் நேற்று அதிகாலை திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவாவிலிருந்து அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்ற ஏர் இண்டியா விமானம், லண்டனில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு சென்ற பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம், டெல்லியில் நேற்று காலை 5.50 மணிக்கு பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்பு அந்த விமானங்கள், சென்னையில் நேற்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. 5 விமானங்களிலும் 618 பயணிகள் இருந்தனர். பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் சிற்றுண்டி, காபி வழங்கின. அதன் பின்பு 8 மணிக்கு மேல் வானிலை சீரடைந்ததும் நேற்று காலை 8.15 மணிக்கு 4 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூரு புறப்படுச் சென்றன. அதேபோல் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 3 விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டன.