சென்னை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் தற்காப்புக் கலை பயிற்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில்உள்ள 86 நடுநிலைப் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியம், வலிமையான உடல், தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு ஆகிய பயிற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தி தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. தற்காப்புக் கலை பயிற்சியை சென்னை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அனிதா தொடங்கி வைத்தார்.