சென்னை: வியாசர்பாடி மற்றும் கிண்டி கோட்டத்தில் நாளை மறுநாள் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும், என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:வியாசர்பாடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி காலை 11 மணியளவில் 110/33 கி.வோ வியாசர்பாடி துணை மின் நிலைய வளாகத்தில் (ராமலிங்கர் கோயில் எதிரில்) அமைந்துள்ள செயற்பொறியாளர் / இயக்கம் மற்றும் பராமரித்தல் / வியாசர்பாடி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், வியாசர்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.