சென்னை : சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக கூறப்படுபவர்களின் பட்டியலை வெளியிட கோரி யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கு நீதிபதிகள்,