கியார் புயலில் காணாமல் போனதாக கூறப்பட்ட மீனவர்கள் பத்திரமாக உள்ளனர் : தமிழக அரசு

சென்னை : கியார் புயலில் காணாமல் போனதாக கூறப்பட்ட மீனவர்கள் பத்திரமாக உள்ளதாகவும் விமானம் மூலம் தேடியபோது மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 35 பேர் கொண்ட குழு அமைத்து மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. அரசு தரப்பு விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கியார் புயலில் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை கண்டுபிடிக்க மீட்புக்குழு அமைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: