தமிழ்நாட்டிற்கு 2 கலைப் பொக்கிஷங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலச்சந்தர் : கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை : தமிழ் திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் தான் நீடித்திருப்பதற்கு காரணம் பாரதிராஜாவும் பாலச்சந்தரும் தான் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த், கமல், நாசர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பேசிய வைரமுத்து, இந்தியாவின் கலை அடையாளங்கள் ரஜினி, கமலை கொடுத்தவர் பாலச்சந்தர் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பாலச்சந்தர் வெறும் இயக்குனர் மட்டும் இல்லை, தமிழ் மொழியின் மேதையாக இருந்தவர் என்றும் ரஜினி, கமலை பற்றித்தான் அதிக நேரம் பாலச்சந்தர் பேசிக் கொண்டு இருப்பார் என்றும் கூறினார்.

Related Stories: