சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி பேரறிவாளன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பேரறிவாளினின் சொந்த ஊர் உள்ள திருப்பத்தூர் தாசில்தாருக்கு பரோல் தொடர்பான உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.