சென்னை: சென்னை, சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்தவர் கே.பாஸ்கர். இவர் கடந்த 1.1.2004 முதல் 26.11.2009ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 789 மதிப்பில் சொத்துகளை தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கண்காணிப்பாளர் பாஸ்கர், அவரது மனைவி அனிதா ஆகியோர் முறைகேடாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் சென்னையில் உள்ள 9வது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.