பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் பெரியகுளம் வட்டார வேளாண்மை துறை சார்பில் நெற்பயிர்களில் புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன், வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் குணசேகரன், ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு புழு தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து செயல்விளக்க ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்தனர்.