சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் தேமுதிக கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் சதீஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக-வின் கட்சி அலுவலகம் கோயம்பேட்டில் உள்ளது. அந்த தலைமை அலுவலகத்தில் தான் கூட்டமானது நடைபெற்றது. இதில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 67 பேரும் பங்கேற்றனர். தொடர்ந்து தேமுதிக- வின் கட்சி வளர்ச்சி பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக முன்னெடுப்பது தொடர்பாகவும், அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களை கேட்க இந்த கூட்டமானது நடைபெற்றது.