திருச்சி: இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் முதல் நாளான நேற்று 530 பேர் தேர்வாகினர். 2ம் நாளான இன்று 800 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளுக்கான தேர்வு சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண் காவலர்களுக்கு நேற்று துவங்கி வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. பெண்களுக்கு 9 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கிறது. இதில் ஆண்கள் 2,473 பேருக்கும், பெண்களில் 1,251 பேருக்கும் என மொத்தம் 3,724 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் ஆண்களுக்கு 3 கட்டங்களாக நடக்கும் தேர்வில் முதல் நாளான நேற்று கலந்துகொள்வதற்காக 800 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.