சென்னை: ஓரே நேரத்தில மாரடைப்பு, பக்கவாதத்தால் பாதிப்பட்டவர்களுக்கு நவீன சிகிச்சை அளித்து அப்பல்லோ மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாத்தால் பாதிக்கப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவால் நிறைந்தது ஆகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட நான்கு பேரை நவீன சிகிச்சை மூலம் ஓம்எம்ஆர் உள்ள அப்பல்லோ பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படுவர்களை கோல்டன் டைம் எனப்படும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்படி அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சை துறை மருத்துவர் கார்த்திகேயன், இதய சிகிச்சை துறை மருத்துவர் அருள், 24 மணி நேரம் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், பக்கவாதத்தைக் கையாளப் பயிற்சி பெற்ற செவிலியர் மற்றும் பிசியோதெரபி முறை நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழு விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு நவீன சிகிக்கை அளித்து குணப்படுத்தியுள்ளனர்.