ஆவடி : ஆவடி மாநகராட்சி, முத்தாபுதுப்பேட்டை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மின்விளக்குகள் எரியாததால் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆவடி மாநகராட்சி 46வது வார்டில் முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகர், குளக்கரை தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள கம்பங்களில், பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் அனைத்து தெருக்களும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் இரவில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘முத்தாபுதுப்பேட்டை, குளக்கரை தெரு மற்றும் 5 குறுக்கு தெருகளில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலின்போது அனைத்து மின் விளக்குகளும் உடைந்து சேதமானது. அதன் பிறகு அந்த விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இப்போது, அங்குள்ள தெருக்களில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவில் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கிறது.