கொடைக்கானல்: ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கொடைக்கானலில் 2 போட் கிளப்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியில் 4 போட் கிளப்கள் உள்ளன. இதில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் 2 போட் கிளப்கள், கால்டன் ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஒரு போட் கிளப், போட் அண்ட் ரோயிங் கிளப் சார்பில் ஒரு போட் கிளப் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் கொடைக்கானலை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், கொடைக்கானல் ஏரியில் 2 தனியார் கிளப்கள் சார்பில் படகுகளை இயக்குவதன் மூலம், கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால் அரசுக்கோ, நகராட்சிக்கோ பணம் செலுத்துவது கிடையாது. எனவே படகுகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி நகராட்சி அதிரடி நடவடிக்கை கொடைக்கானலில் 2 போட் கிளப்களுக்கு சீல்
- நகராட்சி நடவடிக்கை நடவடிக்கை
- போட் கிளப்புகள்
- கொடைக்கானல்
- ஐகார்ட் கிளை
- Bot Clubs
- நகராட்சி நடவடிக்கை சீல்