திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:  திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று காலை தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில்  நேற்று காலை 7.30 மணிக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர்.  பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்ட பின், அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: