சென்னை: கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.2017 ஏப்ரலில் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சயன், மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, உதயன், ஜிதின் ஜாய், ஜாம்ஷேர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், தமிழக முதல்வருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரத்தால் வழக்கு திசைமாறி போய்விடும் என்று கூறி சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட அரசு வக்கீல் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.