தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொக்கோடு பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராம். இவரது வீட்டில் ஆந்தை கூடு கட்டி இருந்ததை கண்டுபிடித்தார். அதை பார்த்தபோது அதில் 6 ஆந்தைகள் இருந்தன. இன்று வைகுண்டராம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த ஆந்தைகளை பிடித்து உதயகிரி கோட்டையில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.