சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என கூறினார். மேலும் குழந்தை சுஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என கூறினார்.

Related Stories: