தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், சென்னை மாநகராட்சி மருத்துவ சேவை சார்பில், மத்திய அரசு திட்டமான “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்”, “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தை, சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவிகளுடன் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி கூறுகையில், “பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இத்திட்டம் பெண் சிசு கொலையை தடுப்பதற்கும், பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவும் வழிவகுக்கும்” என்றார்
பழைய வண்ணாரப்பேட்டையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
- பழைய வாஷர்மன்பேட்டை
- கலெக்டர் திறந்து வைத்தார். பழைய வாஷர்மன்பேட்டை