மதுரை: இலங்கை, கொழும்புவை சேர்ந்த சங்கசிரந்தா, கொழும்பு கெனுமுல்ல முகாமைச் சேர்ந்த முகம்மது சப்ராஸ் ஆகிேயார் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, ‘‘தப்பிச்சென்ற இருவரும் கடந்த செப். 10ம் தேதி கொழும்பு தலைமையியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இந்த தகவல் இலங்கை தூதரகத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது’’ என்றார். அரசு வக்கீல் தினேஷ்பாபு , ராமநாதபுரம் எஸ்பி தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், ‘‘பாம்பன் கடல்வழியாக இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாம்பன் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்டது தொடர்பாக கேணிக்கரை இன்ஸ்பெக்டருக்கு ெமமோ கொடுக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கத்திற்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.