சென்னை: டெல்லியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து போலீசாரின் ஆர்ப்பாட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.