போலீசார் போராட்டத்துக்கு தமிழக ஐபிஎஸ் சங்கம் ஆதரவு

சென்னை: டெல்லியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து போலீசாரின் ஆர்ப்பாட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டத்துக்கு மதிப்பில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. டெல்லி போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாரின் போராட்டத்துக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தோளோடு தோள் நின்று தனது ஆதரவை தெரிவிக்கிறது. இந்த சோதனையான நேரத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டத்தின் வழியில் சென்று எந்த பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் எப்போது சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும் என்றும் இந்த சங்கம் நம்புகிறது.

Related Stories: