சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 304 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப சட்ட திருத்தம் மேற்கொள்ள முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.தமிழக பொதுப்பணித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படாததால் பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் 304 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் முதன்மை தலைமை பொறியாளர் அரசு செயலாளர் மணிவாசகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கடந்த 2009 முதல் 2019 வரை 304 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் கல்வி தகுதி கொண்டவர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.